Latestமலேசியா

Balik Pulauவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

பாலேக் பூலாவ் , மே 25 – பினாங்கில் Jalan Balik Pulau வில் இன்று காலை கடை வீட்டில் நிகழ்ந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். காலை ஏழு மணியளவில் நிகழ்ந்த அந்த தீவிபத்தில் அவர்களில் இருவர் அந்த கடை வீட்டின் கீழ் தளத்திலும் மற்றொருவர் மேல் மாடியிலும் இறந்து கிடந்தனர் என Sri BaliK Pulau தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் Mohd Faris Mansor உறுதிப்படுத்தினார்.

58 வயதுடைய Nurul Bowjaya என்ற பெண்மணியும் அவரது 33 வயதான மகன் Muhammad Ibrahim, 20 வயது மகள் Rahbiah Jasmin மரணம் அடைந்ததாக அடையாளம் கூறப்பட்டது. இந்த தீவிபத்தில் அந்த உடன்பிறப்புகளின் மற்றொரு சகோதரரான 30 வயதுடைய Rashideen உயிர் பிழைத்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது அந்த பெண்மணியும் அவரது மூன்று பிள்ளைகளும் அவ்வீட்டில் இருந்ததாக தெரிகிறது. தொடக்கத்தில் அந்த பெண்மணியும் அவரது இரு மகன்களும் அவ்வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவரது மகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதை உணர்ந்து தனது மகனுடன் மீண்டும் Nurul Bowijaya வீட்டிடிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் மூவரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலையில் அவர்கள் இறந்ததாக Mohd Faris தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!