FA கிண்ணத்தை வாகை சூடிய Manchester United; Europa League கால்பந்து போட்டிக்கும் தகுதிப் பெற்றதால் ரசிகர்கள் கொண்டாட்டம்
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/2024-05-25t162852z-938642986-up1ek5p19s106-rtrmadp-3-soccer-england-mci-mun-report-copy.jpg)
லண்டன், மே-26 – பலம் பொருந்திய Manchester City-யை 2-1 என்ற கோல்களில் தோற்கடித்து Manchester United இங்லீஷ் FA கிண்ணத்தை வாகை சூடியுள்ளது.
லண்டன் Wembley அரங்கில் நடைபெற்ற பரபரப்பான அவ்வாட்டத்தில் United-க்கு இளம் அதிரடி வீரர்களான
Alejandro Garnacho-வும் Kobbie Mainoo-வும் கோலடித்தனர்.
City-யின் ஆறுதல் கோலை, ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது Jeremy Doku புகுத்தினார்.
ஆட்ட நாயகன் விருதையும் Kobbie Mainoo-வே வென்றார்.
FA கிண்ணத்தை வென்றதன் அடிப்படையில் Manchester United, அடுத்தப் பருவத்திற்கான Europa League கால்பந்தாட்டத்திற்குத் தகுதிப் பெற்றது.
பிரிமியர் லீக்கை, கிளப் வரலாற்றில் படுமோசமாக எட்டாவது இடத்தில் முடித்த United-டுக்கு இவ்வெற்றி தெம்பையும் அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
அதே சமயம் பதவி ஆட்டம் கண்டுள்ளதாகக் கூறப்படும் United நிர்வாகி Erik Ten Hag-கிற்கும் தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது.
Manchester United, FA கிண்ணத்தை வெல்வது இது 13-வது முறையாகும்.
இறுதியாட்டத்தில் தோல்விக் கண்டதால், பிரிமியர் லீக் மற்றும் FA கிண்ணம் என இரட்டை வெற்றியை அடுத்தடுத்து பதிவுச் செய்த முதல் அணி என்ற பெருமையைப் பெறும் முயற்சியில் Manchester City தோல்விக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.