ஜெனீவா, டிசம்பர் 20 – புதிதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் JN.1 கொரோனா வைரஸ் தொற்று, கலவையான மாறுபட்ட VOI தொற்று என, WHO – உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
எனினும், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும் WHO கூறியுள்ளது.
JN.1 தொற்று அதிவேகமாக பரவும் ஆற்றலை கொண்டிருக்கும் போதும், மக்களுக்கு மிகவும் குறைவான சுகாதார அச்சுறுத்தலை மட்டுமே அது ஏற்படுத்துவதை, சான்றுகள் காட்டுகின்றன.
JN.1 மற்றும் பிற மாறுபாடுகளால் ஏற்படும் நோய், அதனால் ஏற்படும் இறப்புகளிலிருந்தும், பாதிப்புகளிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் திறனை தற்போதுள்ள தடுப்பூசிகள் கொண்டுள்ளன.
இருப்பினும், நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, முகக் கவசம் அணிவது, காற்றோட்டம் இல்லாத இடங்களில் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பது அவசியமென WHO அறிவுறுத்தியுள்ளது.