![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-21-Mar-2024-08-52-AM-4408.jpg)
கோத்தா பாரு, மார்ச் 21 – குடும்ப பிரச்சனை நெருக்கடியினால் ஏற்பட்ட மனஉளைச்சலால் Kota Baharu விலுள்ள Pulau Melaka பாலத்திலிருந்து கீழே விழுந்த குத்தகையாளர் ஒருவர் பொதுமக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டார். நேற்றிரவு மணி 9.30 அளவில் பாலத்திற்கு கீழே இருந்த இறால் விற்பனையாளர் Mohd Eziwan Ismail மற்றும் அவரது நண்பர்கள் பாலத்திலிருந்து கீழே விழுந்தவரை காப்பாற்றினர். பாலத்தின் மேலே பல வாகனங்கள் ஆர்ன் அடித்துக்கொண்டு சென்றதோடு அங்கு நெரிசலாக இருந்ததையும் Mohd Eziwan கண்டுள்ளார்.
அப்போது திடீரென பாலத்திலிருந்து ஆற்றில் ஒருவர் கீழே விழுவதை கண்டு உடனடியாக தாமும் தமது நண்பர்களும் இயந்திர படகை ஆற்றின் நடுவுக்கு ஓட்டிச் சென்று அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த ஆடவரின் சட்டையை பிடித்து இழுத்து காப்பாற்றினோம் என Mohd Eziwan கூறினார். 40 வயதுடை அந்த ஆடவரை பின்னர் ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தோம் என அவர் தெரிவித்தார். Pasir Puteh , Semerak கில் வசித்துவரும் அந்த நபர் Honda Odyssey வாகனத்தின் மூலம் Pulau Melaka பாலத்திற்கு வந்துச் சேர்ந்ததாக கூறப்பட்டது.