![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-16-Mar-2024-11-47-AM-8235.jpg)
கோத்தா திங்கி, மார்ச் 16 – ஜாலான் கோத்த திங்கி – மெர்சிங் சாலையில் ‘MPV Toyota Alphard’ வாகனத்தின் ஓட்டுனர், கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து சுங்கை செடிலி ஆற்றோரத்திற்கு அருகேயுள்ள பள்ளத்தில் அந்த வாகனம் விழுந்துள்ளது.
ஓட்டுநர் தனது பல்நோக்கு-வாகன இருக்கையில் சிக்கிக்கொண்டதால் தன்னை விடுவித்து வெளியேற முடியாமால் தவித்துக்கொண்டிருந்தார். வழிப்போக்கர்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவைச் சேர்ந்த எட்டு பணியாளர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி இப்ராஹிம் வாஹித் தெரிவித்தார்.
அவர்கள் அந்த MPV வாகன ஓட்டுநரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பள்ளத்தில் இருந்த MPV வாகனத்தை வெளியே கொண்டுவருவதற்கு மீட்புப் பணியாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டனர்.