![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-28-Nov-2023-11-00-AM-9657.jpg)
ஜோர்ஜ் டவுன் , நவ 28 – பினாங்கில் ஜாலான் புக்கிட் கம்பீர் சாலை எச்சரிக்கை விளக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த புரோடுவா மைவி கார் ஒன்று மூன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதியதில் நான்கு ஆடவர்கள் காயம் அடைந்தனர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அருகே ஜாலான் துன் டாக்டர் அவாங் சாலையில் அந்த விபத்து நிகழ்ந்தாக பினாங்கு திமூர் லாவுட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் வி.சரவணன் தெரிவித்தார். சிவப்பு எச்சரிக்கை விளக்கின்போது மோட்டார் சைக்கிளோட்டிகளும் இதர வாகன ஓட்டுனர்களும் பச்சை விளக்கிற்காக காத்திருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த 60 வயது பெண்மணி ஓட்டிய புரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று கார்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் மோதித் தள்ளியதாக சரவணன் கூறினார் .
இதனால் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் கழுத்து மற்றும் வலது காலில் காயம் அடைந்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் தலையில் காயம் அடைந்தனர். மேலும் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு காலில் முறிவும் மற்றொரு புரோடுவா மைவி கார் ஓட்டுனரான பெண்ணுக்கு நெஞ்சில் காயத்திற்கு உள்ளானதாக சரவணன் கூறினார்.