![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-03-at-7.26.25-PM-1.jpeg)
கோலாலம்பூர், ஏப் 3 – NKVE விரைவு நெடுஞ்சாலையில் Duta டோல் சாவடியை நெருங்கிக் கொண்டிருந்த இரண்டு லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் 26.1 ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் சாலையின் வலது மற்றும் மத்திய தடங்களில் இதர வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டதாக Plus நிறுவனம் டுவிட் செய்திருந்தது.