Latestமலேசியா

Rafah வில் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டதை மலேசியா வரவேற்றுள்ளது

கோலாலம்பூர், மே 25 – Rafah வில் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டதை மலேசியா வரவேற்றுள்ளது. மேலும் எந்தவொரு தடையும் இன்றி மனிதாபிமான உதவிப் பொருட்கள் சென்றடைவதற்கு Rafah வில் எல்லை பாதுகாப்பை திறந்து வைப்பதை நிலைநிறுத்தும்படியும் இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அனைத்துலக நீதிமன்றத்தின் நடவடிக்கையை பின்பற்றும்படி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும்படி அனைத்துலக சமூகத்திற்கும் மலேசியா அறைகூவல் விடுத்துள்ளது. இந்த உத்தரவை இஸ்ரேல் பின்பற்றத் தவறினால் அனைத்துலக சட்டத்தை அவமதிப்பதற்கு ஒப்பானதாகும் என அந்த அறிக்கையில் மலேசியா சுட்டிக்காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!