Latestமலேசியா

RM 281,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சுங்கை பூலோ, மார்ச் 15 – சிலாங்கூர் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் RM 281,000 ரிங்கிட் மதிப்புள்ள 90 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது.

சுபாங் ஜெயா, அம்பாங் ஜெயா மற்றும் பாலக்கோங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

சுபாங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையில் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களது காரிலிருந்து 40. 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து அம்பாங் ஜெயாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து மேலும் 50.3 கிரேம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுசைன் உமர் கான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாலக்கோங்க் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு தம்பதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே சபா பெர்ணமில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் 44 வயதுடைய ஆடவன் ன் செய்யப்பட்டதோடு RM 145,000 ரிங்கிட் மதிப்புள்ள 9,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுசைன் உமர் கான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!