கோலாலம்பூர், டிச 5 – 100 ரிங்கிட் இ-மடானி உதவித் தொகை ரொக்கமாக கொடுப்பதாக கூறிக்கொள்ளும் மோசடி கும்பலின் சதியில் சிக்கிவிட வேண்டாம் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கம் பொதுமக்களுக்காக உதவிதொகை அறிவிக்கின்ற போது இதுபோன்ற மோசடி கும்பல்கள் முளைத்துவிடுவதாக அவர் கூறினார்.
ஆகையால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் ரொக்கம் கொடுப்பதாக நம்பி 100 ரிங்கிட்டையும் ஏமாந்துவிட வேண்டாம் என தெரிவித்தார்.