
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை
மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார்.
அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, அவரின் காரைக் கைப்பற்றியதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
ஆபத்தாக வாகனமோட்டியது, மதுபோதையில் வாகனமோட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்பட ஏதுவாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர் திசையில் வாகனமோட்டும் வீடியோ முன்னதாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



