ஜொகூர் பாரு, மார்ச் 25 – ஜொகூர் பாலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த அடிதடி தொடர்பில் மலேசியர்களான 5 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளோட்டிகளான அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வே அந்த அடிதடிக்கு காரணம் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் இருந்து 2 ஹெல்மட்டுகள், 3 T சட்டைகள், 1 ஜேக்கேட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷ்னர் ரவூப் செலாமாட் கூறினார்.
அவ்வாடவர்கள் சரமாரியாக அடித்துக் கொள்ளும் வீடியோக்கள் முன்னதாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒருவரை, நால்வர் சேர்ந்துக் கொண்டு சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.
அச்சண்டையில் இருவருக்கு முகம் மற்றும் தலையில் வீக்கம் ஏற்பட்ட வேளை மற்றவர்களுக்கு காயங்கள் இல்லை.
சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே குற்றப்பதிவைக் கொண்டிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அடிதடியில் ஈடுபட்ட 30 வயது மதிக்கத்தத்க இன்னொரு ஆடவர் தேடப்படுகிறார்.