Latestமலேசியா

கிள்ளானில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது

கோலாலம்பூர், ஜன 22 – கிள்ளானில் புக்கிட் அமான்  குற்றவியல் துறை  சிறப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். “Ops Khas Aman Phase 1”-ஆவது திட்டத்தின்கீழ் ஜனவரி 15ஆம் தேதி சனிக்கிழமைவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக  புக்கிட் அமான் வேவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவின் இயக்குனர் துணை கமிஷனர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார். குண்டர் கும்பல் இயக்கங்களுடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த 120 பேரும் வெளிநாடுகளைச் சேர்ந்த 13 பேரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். 

அதோடு அந்த குண்டர் கும்பல் உறுப்பினர்களுக்கான வருமானத்தில் மூலம் கிடைத்த   வளங்களும் இந்த நடவடிக்கையின்போது முறியடிக்கப்பட்டது. குண்டர் கும்பலின் நடப்பு  உறுப்பினர்களின் தகவலின் அடிப்படையில் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்  கைதான  இதர தனிப்பட்ட  நபர்களிடம் பெறப்பட்ட  உறுப்பினர் தகவல்கள்  மூலம் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கிள்ளான் வட்டாரத்தில் இரண்டு கும்பல்களுக்கு வருமானம் வளங்களாக செயல்பட்டுவந்த   குத்தகை தொழில்கள் நடைபெற்று வரும்  16 இடங்களிலும்  போலீசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!