
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மாடிக் கட்டிடம் இடிந்து , அருகிலிருந்த ஹோட்டல் மீது விழுந்ததில் அதில் தங்கியிருந்த மலேசிய விருந்தினர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் உயிரிழந்தார். மற்றொருவருக்கு அதிகாலை 3 மணியளவில் மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் இடிபாடிகளில் சிக்கியிருந்ததால் மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை .
இந்த பேரிடரின்போது கட்டுமானத் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த, பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்களான பதினேழு பேர் காணவில்லையென தீயணைப்புப் படையின் பெண் பேச்சாளர் மரியா லியா சஜிலி ( Maria Leah Sajili ) தெரிவித்தார்.
அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
அந்த கட்டுமானப் பகுதியில் 70 பேர் வேலை செய்து வந்ததாகவும் வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.



