
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஆடவர் ஒருவரின் சடலம் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பால்மரம் வெட்டும் நான்கு தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்களை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை கோத்தாபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்தது. குற்றவியல் சட்டத்தின் 117 ஆவது பிரிவின் கீழ் இன் செப்டம்பர் 9ஆம் தேதிவரை அவர்களை காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
40 முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த நான்கு சந்தேக நபர்களும் நேற்றிரவு பகாங்கின் திரியாங்கில் பல்வேறு இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர். ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சுல்தான் யஹ்யா பெட்ரா பாலம் அருகே உள்ள கிளந்தான் ஆற்றில் கழுத்தில் வெட்டப்பட்ட காயத்துடன் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக கோத்தா பாரு போலீஸ் தலைவர் முகமட் ரோஸ்டி டாவுட் ( Mohd Rosdi Daud) தெரிவித்தார்.