Latestமலேசியா

யார் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்; ஒற்றுமையாக இருந்தால் இந்துக்களை யாராலும் அசைக்க முடியாது – சிவக்குமார்

கோலாலம்பூர், ஏப் 30 – இந்து சமயத்தை காப்பதில் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து , ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்து சமயம் பழமையானது என்பதோடு அதன் தொண்மை, தத்துவம் மற்றும் போதனைகளை யாரும் சீர்குலைத்துவிட முடியாது என பினாங்கு நிபோங் தெபாலில் திறக்கப்பட்ட இஸ்கோன் ஆலய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது DSK குழுமத்தின் தலைவருமான சிவக்குமார் வலியுறுத்தினார்.

இந்த சமயத்தின் வரலாறு தெரியாமல் இந்து சமயம் மற்றும் ஆலயம் குறித்து சிலர் அவதூறாக பேசி வருகின்றனர்.

கோவில் ஹராம் என்ற வார்த்தையை சிலர் தொடர்ந்து பேசி இந்துக்களின் மனதை புன்படுத்துகின்றனர். யார் என்ன பேசினாலும் இந்து சமயம் பாதிக்காது என்பதை நாம் உறுதியாக நம்புவோம் என அவர் கூறினார்.

இதனிடையே, இஸ்கோன் ஆலயம் மிகவும் அழகாக கட்டப்பட்டுள்ளது. இந்த வேளையில் ஆலய கட்டுமானத்திற்கு உதவிய அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இளம் வயதிலேயே நமது பிள்ளைகளுக்கு சமய போதனைகளையும் வழிபாட்டு முறைகளையும் கற்றுத் தந்து அவர்களை பக்குவபடுத்திவரும் இஸ்கோனின் முயற்சிகளையும் டத்தோ சிவக்குமார் பாராட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!