Latestமலேசியா

அரசாங்க நிதி முறைகேடல் தொடர்பில் முன்னாள் பிரதமரும் அவரது அதிகாரிகளும் விரைவில் விசாரணைக்கு MACC அழைக்கும்

செப்பாங், ஜன 8 – பல  கோடி ரிங்கிட்  அரசாங்க நிதி முறைகேடு தொடர்பில்  ஒரு முன்னாள் பிரதமரும் அவரது முன்னாள் அதிகாரிகளையும் MACC  விரைவில் அழைக்கும் என அதன் தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி கூறியுள்ளார்.   அந்த பிரதமரும் அவரது முன்னாள் அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை தம்மிடம் இல்லையென்றும்  குறைந்தது நால்வர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என  தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஆசாம் பாக்கி தெரிவித்தார். அறிமுகம் மற்றும் விளம்பரத்திற்காக  2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்கும்  அரசாங்கம் செலவிட்ட 700 கோடி ரிங்கிட்  குறித்து  விசாரணை நடத்திவருவதாக இதற்கு முன்  SPRM உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!