Latestமலேசியா

நோன்பு பெருநாள் காலத்தில் சாலை விதிகளை மீறியோருக்கு 14,400 குற்றப் பதிவுகள் ஜோகூர் ஜே.பி.ஜே வழங்கியது

ஜோகூர் பாரு , ஏப் 29 – நோன்பு  பெருநாள் காலத்தில்   சாலை விதிகளை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக   14,000  குற்றப் பதிவுகள்  வழங்கப்பட்டுள்ளதாக  ஜோகூர் சாலை போக்குவரத்துத்துறையின்    இயக்குநர்   Azmil Zainan Adnan தெரிவித்திருக்கிறார்.  ஏப்ரல்  1ஆம்தேதி தொடங்கி சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட  20 நாள் நடவடிக்கையின்போது  60,230  வாகனங்கள்    பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.  நாங்கள் சாலை தடுப்பு பரிசோதனை நடவடிக்கை  எதிலும் ஈடுபடவில்லை.  பெருநாள் காலத்தில் குறிப்பாக சொந்த ஊர்களுக்கு  செல்லும்  வாகன ஓட்டிகள்  போக்குவரத்து   நெரிசலால் பாதிக்கப்படும் சூழ்நிலையை  நாங்கள் உணர்ந்திருந்தோம். 

 எனினும்  போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக  மாநிலத்திலுள்ள  12  முக்கிய இடங்களில்   சிறப்பு   நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்  என Azmil  தெரிவித்தார்.   9,087  குற்றப் பதிவுகள் மோட்டார் சைக்கிளோட்டிளுக்கும் ,  பஸ் மற்றும்  டாக்சிகள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு   235 குற்றப் பதிவுகளும், வர்த்தக வாகனங்களுக்கு  1,406   குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டதாக    Azmil  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!