Latestமலேசியா

16 மாதக் குழந்தைக்கு போதைப் பொருள் கலந்த பாலை கொடுத்த பெண் ; குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – பிறந்து 16 மாதங்களே ஆன தனது மகனுக்கு, மெத்தாபெட்டாமின் போதைப் பொருள் கலந்த பாலை கொடுத்த குற்றத்தை மறுத்து, பெண் ஒருவர் விசாரணை கோரியுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன் அதே குற்றத்தை ஒப்புக் கொண்ட 34 வயதான அப்பெண், இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில், வாக்குமூலத்தை மாற்றி, குற்றத்தை மறுத்துள்ளார்.

எனினும், அப்பெண்ணின் 40 வயது கணவர், குற்றத்தை மறுத்து விசாரணை கோரும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.

பிப்ரவரி 19-ஆம் தேதி, மாலை மணி ஆறு வாக்கில், தாமான் மேடானிலுள்ள, வீடொன்றில், போதைப் பொருள் கலந்த பாலை தங்கள் மகனுக்கு கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இவ்வழக்கு விசாரணை மே பத்தாம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!