Latestமலேசியா

கிராமத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்; அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள்

கெமமான், நவ 16 – கெமமானுக்கு அருகே, ஃபெல்டா நெராம் 1இல் உள்ள கம்போங் பாடாங் லாலாங்கில் யானைகள் புகுந்து அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பழத் தோட்டங்களை நாசப்படுத்தியுள்ளதால் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தங்களது வீட்டிற்கு பின்னால் உள்ள வேலிகளையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளதாக அங்குள்ள கிராமவாசிகள் தெரிவித்தனர்.

தங்களது தோட்டங்களில் உள்ள விளைச்சல் பெரும்பாலும் நாசப்படுத்தப்பட்டுள்ளதாக கார் கழுவும் பட்டறை வைத்திருக்கும் 53 வயதுடைய அம்ரான் கசாலி கூறினார். இரவு நேரத்தில் யானைகளின் நடமாட்டம் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே அதிகமாக இருப்பதால் இந்த கிராமத்தில் உள்ள மக்களில் பெரும்பாலோர் அச்சம் மற்றும் கவலையோடு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!