Latestமலேசியா

மின்னணு தற்காலிக வேலை வருகை அட்டைகளை போலியாக தயாரித்து வங்காளதேச ஆடவன் 50,000 ரிங்கிட் லாபம்

புத்ரா ஜெயா, மே 14 – ஒரு தனிப்பட்ட கணினி மற்றும் பிரிட்டர் துணையுடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மின்னணு தற்காலிக வேலை வருகை அட்டைகளை (e-PLKS) போலியாகத் தயாரித்து 50,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டியதாக நம்பப்படுகிறது. தலைநகரில் உள்ள ஜாலான் துன் டான் சியூ சின் என்ற இடத்தில் தரைக்கம்பளம் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து செயல்படும் 30 வயதுடைய அந்த சந்தேக நபர், முகவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுயமாக அச்சிடப்பட்ட e-PLKS-ஐ ஒரு துண்டுக்கு RM50 என்ற குறைந்த விலையில் வழங்கியுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு நேற்று காலை 9.30 மணியளவில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து அந்த நபரின் நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சோதனையின் விளைவாக, அச்சிடத் தயாராக இருந்த பல போலி e-PLKS மற்றும் வெளிநாட்டு கடப்பிதழ்களின் பல நகல்களை குடிநுழைவுத்துறை கண்டுபிடித்ததாக அத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
சந்தேக நபர் போலியான e-PLKS-ஐ உருவாக்குவதைத் தவிர, பதிவு ஆவணங்கள் மற்றும் வணிகம் தொடர்பான கடிதங்களின் நகல்களையும் போலியாக உருவாக்கியுள்ளார்.
அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், சுமார் 45,000 முதல் 50,000 ரிங்கிட்வரை லாபம் ஈட்டியதாகவும் நம்பப்படுகிறது என செய்தியாளர் கூட்டத்தில் ஸக்காரியா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!