கோலாலம்பூர், மார்ச் 18 – SPM, STPM மற்றும் உயர்கல்விக்கூடங்களின் நுழைவுக்கான தேர்வு நாள்காட்டிகள், 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் சீரமைக்கப்படும்.
2026-ஆம் ஆண்டு, பள்ளி தவணை வழக்கம் போல ஜனவரியில் தொடங்குவதற்கு ஏற்ப அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, ஆசிரியர்களின் பணிச் சுமையையும் குறைக்க உதவும்.
2026-ஆம் ஆண்டின் புதிய கல்வித் தவணை, வழக்கம் போல ஜனவரியில் தொடங்குவதை உறுதிச் செய்வதோடு, SPM, STPM மற்றும் பல்கலைக்கழக நுழைவும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதும் உறுதிச் செய்யப்படுமென, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது வோங் உத்தரவாதம் அளித்தார்.