
கோலாலம்பூர், மே-9, மோசடி கும்பல்கள் சாதாரண மக்களை மட்டும் குறி வைப்பதில்லை.
பிரபலங்களிடமும் தங்களின் வேலையைக் காட்டி வருகின்றன.
அப்படியொரு மோசடிக்கு ஆளாவதிலிருந்து தப்பி பிழைத்துள்ளார் நாட்டின் பூப்பந்து சகாப்தமான டத்தோ லீ சோங் வேய்.
கைப்பேசிக்கு அழைத்தவர் தனது அடையாள அட்டை எண்களையும் கைப்பேசி எண்களையும் சரியாகக் குறிப்பிட்டதால், சோங் வேய் அதிர்ச்சியடைந்தார்.
“மலாக்காவில் ஏதோ மோசடியில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் அழைத்தவர் சொன்னார்; போலீஸீடம் புகார் செய்து விடுவேன் என நான் மிரட்டினேன்; அலுவலக முகவரியைக் கேட்டேன்; திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது” என சோங் வேய் கூறினார்.
தாம் சற்று விழிப்பாக இல்லாமலிருந்திருந்தால், மோசடிக்கு ஆளாகியிருக்கக் கூடுமெனக் குறிப்பிட்ட சோங் வேய், பொது மக்களும் கவனமாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
எனவே எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாதவர்களிடம் அடையாள அட்டை எண்களையோ வங்கிக் கணக்கு விரங்களையோ கடவுச்சொல்லையோ கொடுக்க வேண்டாமென அவர் அறிவுறுத்தினார்.