செம்போர்னா, மார்ச் 12 – சபாவில் ஜாலான் செம்போர்னா – தவாவில் சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒரு லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டு சுற்றுப்பயணிகள் மரணம் அடைந்ததோடு மூவர் காயம் அடைந்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 60 வயது சுற்றுப்பயணியும், வியட்னாமைச் சேர்ந்த 40 வயது சுற்றுப்பயணியும் இறந்ததாக செம்போர்னா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் மஸ்லான் சர்மன் தெரிவித்தார்.
அந்த விபத்தில் வேன் ஓட்டுனரான 43 வயதுடைய சபா ஆடவரும் சிங்கப்பூரைச் சேர்ந்த 67 மற்றும் 71 வயதுடைய சுற்றுப்பயணிகளும் காயம் அடைந்தனர். சிங்கப்பூரின் இதர இரண்டு சுற்றுப்பயணிகளான 11 வயது சிறுமியும் 58 வயதுடைய ஆடவரும் சொற்ப காயத்திற்கு உள்ளதானதாக நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் மஸ்லான் சர்மன் தெரிவித்தார்.