புத்ராஜெயா, மார்ச் 13 – சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீர் பையில் கற்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காரணமாக இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக, சுகாதார அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
டாக்டர் ஜுல்கிப்ளி தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து குணமடைய இறைவனை பிராத்திப்போம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.