கோலாலம்பூர், ஜன 9 – துபாய் சதித்திட்டம் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அழைக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களில் செகுபார்ட், வான் முஹம்மட் அஸ்ரி வான் டெரிஸ் ஆகியோரும் அடங்குவர் என போலீஸ் படைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்திருக்கிறார். அதோடு ராஜா பெட்ரா கமருதீனுக்கு எதிராக விசாரணையும் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என்ற காணொளி தொடர்பாக நாடு முழுவதிலும் 43 போலீஸ் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக ரசாருதீன் தெரிவித்தார்.
10 நாட்களுக்குப் பின் அரசாங்கம் கவிழும் என்று உரையாற்றிய பிரதான சந்தேகப் பேர்வழி ராஜா பெட்ராவுக்கு எதிராக விசாரண தொடங்கப்பட்டுள்ளது. ராஜா பெட்ரா மான்செஸ்டரில் இருக்கிறார். அவரை நாம் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. பாப்பாகோமோ எனப்படும் வான் முஹம்மட் அஸ்ரி, செகுபார்ட் மற்றும் சலீம் இஸ்கண்டார் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரசாருதீன் கூறினார்.