ஈப்போ, டிச 8 – கிரிக்கை நோக்கிச் செல்லும் தாசிக் பேண்டிங் சாலையில் Treler கார் மோதிய கோர விபத்தில் இரண்டு ஆடவர்கள் மரணம் அடைந்தனர். புரோட்டோன் வீரா காரில் சிக்கிக்கொண்ட அந்த இருவரும் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்.
வாகனங்களின் பாகங்களை வெட்டும் சிறப்பு கருவிகளை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தி காரில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே மீட்டதாகவும் அவர்கள் இருவரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.