கோலாலம்பூர், நவ.6 – 1எம்.டி.பி விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் எதிர்நோக்கியிருக்கும் 25 குற்றச்சாட்டுகளில் மூன்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசுத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. திருத்தம் செய்யப்பட்டவை அனைத்தும் இந்த மூன்று குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்ட 1எம்டிபி பணத்தின் அளவு மட்டுமே என்றும், நஜீப்பின் வாதத்திற்கு பாரபட்சம் ஏற்படாது என்று நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் சேக்வேரா கூறினார்.
நஜீப்பிற்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்ட பணத்தின் அளவைக் குறைக்க அரசுத் தரப்பு கோரிய மூன்று திருத்தங்களும் அரசு தரப்பின் 47வது சாட்சியான பேங்க் நெகாரா மலேசியா ஆய்வாளர் ஆடம் அரிஃப் முகமட் ரோஸ்லான் மற்றும் 48 ஆவது சாட்சியான 1MDB யின் விசாரணை அதிகாரி ஃபூ மெய் மின் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். திருத்தப்பட்ட அந்த மூன்று குற்றச்சாட்டுக்ளையும் நஜீப் மறுத்தார்.