Latestமலேசியா

கணக்காய்வாளர் கொலை மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், டிச 20 – கோலாலம்பூர் , கம்போங் செராஸ் பாருவில் கணக்காய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் மேலும் ஒரு சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர். இம்மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணியளவில் உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில், ஆடவரான அந்த கணக்காவாளரின் உடலை சாலை ஓரத்தில் போலீசார் மீட்டனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார். தலைமறைவாக இருந்துவரும் அந்த சந்தேக பேர்வழியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!