பூச்சோங், பிப் 14 – இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து 10 கிலோ பையிலுள்ள மலேசிய மடானி வெள்ளை அரிசியை 30 ரிங்கிட் என்ற விலையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை செலவினம் விவகாரத்தை சமாளிக்கும் நடவடிக்கை மன்றத்திற்கு தலைமையேற்றுள்ள புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையட் அபு ஹுசின் ஹபீஸ் சையட் அப்துல் பசல் இதனை அறிவித்தார். இந்த புதிய பெயரை தொடர்ந்து உள்நாட்டு வெள்ளை அரிசியான (SST) மற்றும் இறக்குமதி வெள்ளை அரிசி ( SSI ) அகற்றப்படுகிறது.
மார்ச் 1ஆம்தேதியிலிருந்து பயனீட்டாளர்கள் 10 கிலோ வெள்ளை அரிசியை 30 ரிங்கிட்டிற்கு பயனீட்டாளர்கள் வாங்கலாம் . இந்த பரிந்துரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரிவிக்கப்பட்டதோடு அவரும் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டதாக சையட் அபு ஹுசின் தெரிவித்தார். வாழ்க்கை செலவின பிரச்சனைக்கு தீர்வு காணும் குழுவுக்கு தலைமையேற்றுள்ள தாம் விரைவான நடவடிக்கையாகவே மடானி அரசாங்க அரிசியின் விலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனிடையே மடானி வெள்ளை அரிசி 5 கிலோ 15 ரிங்கிட் 50 சென்னுக்கும் ஒரு கிலோ அரிசி 3 ரிங்கிட் 50 சென்னுக்கும் விற்கப்படும் என்றும் அவர் கூறினார்.