
சிங்கப்பூர், மே-17 – தனது பராமரிப்பின் கீழிருந்த 1 வயதுக் குழந்தையை குறைந்தது 21 தடவை சித்ரவதை செய்ததாக, வீட்டுப் பணிப்பெண் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2004 மார்ச் முதல் ஜூலை வரை அக்குற்றத்தைப் புரிந்ததாக, 29 வயது பிலிப்பின்ஸ் பெண் Nucom Loreta Talbo மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குழந்தைக்கு வலி ஏற்படும் அளவுக்கு அதனை முரட்டுத்தனமாக தூக்கியது, திருப்பியது, கன்னத்தில் அறைந்தது, தலையைத் தள்ளியது, காதைக் கிள்ளியது என, அப்பெண் கொடூரமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அக்குழந்தையின் தற்போதைய நிலை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
ஜூன் 6-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்குக் வரும் போது, Talbo குற்றத்தை ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.