கோலாலம்பூர், பிப்ரவரி 20 – ரிங்கிட்டின் தற்போதைய மதிப்பு குறித்து விளக்கமளிக்குமாறு, பேங்க் நெகாரா ஆளுனர் Datuk Shaik Abdul Rasheed Abdul Ghaffour-ரிடம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது குறித்து விளக்கமளிக்க அப்துல் ரஷீத் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அன்வார் சொன்னார்.
இன்று காலை மணி ஒன்பது நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.787-ஆக சரிந்தது.
அது நேற்று மாலை பதிவுச் செய்யப்பட்ட 4.785 காட்டிலும் குறைவாகும்.