கோலாலம்பூர், பிப் 7- திரெங்கானு சுல்தானா நூர் ஸாஹிராவுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக சரவா ரிப்போர்ட் இணையத்தள பதிவேட்டின் ஆசிரியர் கிளேர் ரியூகேஸல்-பிரவுனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட கிளேர் ரியூகேஸல் திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் மாஜிஸ்திரேட் நிக் முகமட் தார்மிஸி நிக் முகமட் சுக்ரி இந்த தண்டனையை விதிப்பதாக தீர்ப்பளித்தார். குற்றவியல் சட்டத்தின் 500ஆவது விதியின் கீழ் கிளேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
Related Articles
Check Also
Close