Latestமலேசியா

பினாங்கில் பிப்ரவரி 17 பாடகர் ஹரிஹரனின் மாபெரும் கலைநிகழ்ச்சி

பினாங்கு, ஜன 5 – இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் எதிர்வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பினாங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சிவமணி ஏற்பாட்டில் அண்மையில் பினாங்கில் நடைபெற்ற நிலையில் பாடகர் ஹரிஹரன் இரண்டு பாடல்களை பாடி மகிழ்வித்தார்.

பினாங்கு வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ பார்த்திபன், காரசாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன், கெடா மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஆனந்தன் மற்றும் இதர பல்வேறு பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

இந்த செய்தியாளர் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ஜக்டிப் சிங் டியோ மற்றம் இதர பிரமுகர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.

மேலும் காரசார உணவகத்தில் நடைபெற்ற விருந்திலும் பாடகர் ஹரிஹரனும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அற்புதமான பல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்த ஹரிஹரனின் பாடல்களை நேரில் கண்டுகளிக்க விரும்பும் ரசிகர்கள் இந்த கலைநிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!