நைரோபி, பிப்ரவரி 12 – மேற்கு கென்யாவில், நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், மராத்தான் உலக சாதனையாளர் கெல்வின் கிப்டும், அவரது பயிற்றுனர் கெர்வைஸ் ஹகிசிமானாவும் உயிரிழந்தனர்.
அவ்விபத்தில், மற்றொரு பயணி படுகாயமடைந்தார்.
உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு மணி 11 அல்லது மலேசிய நேரப்படி இன்று அதிகாலை மணி நான்கு வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
அம்மூவரும் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், கிப்டும் அவரது பயிற்றுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை ; மற்றொருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தின் போது, மேற்கு கென்யாவிலுள்ள, எல்டோரெட் நகருக்கு பயணமான அவர்கள், விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற சிகாகோ மாரத்தானில், 2 மணி 35 வினாடிகளை பதிவுச் செய்து கிப்டோ உலக சாதனை படைத்தார்.
அது, இதற்கு முன், கிப்டோவின் சக நாட்டவரான எலியுட் கிப்சோஜின் பதிவுச் செய்த சாதனையைக் காட்டிலும் 34 வினாடிகள் வேகமாகும்.