
கெரிக், ஜூன்-3 – பேராக், கெரிக், கிழக்கு- மேற்கு நெடுஞ்சாலையில் 2 காட்டு யானைகள் ஜோடியாக சாலையின் நடுவே அன்பை பறிமாறி கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
இரவு நேரமாகியும் அந்த ஜோடி அங்கிருந்து நகராததால், வாகனமோட்டிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே சிக்கிக் கொண்டனர்.
யானைகள் இப்போதைக்கு நகராது என தெரிந்துகொண்ட பல வாகனமோட்டிகள், வெளியில் வந்து அதனை இரசிக்கத் தொடங்கி விட்டனர்.
பலர் வீடியோ எடுக்க, யானைகள் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை.
ஒரு கட்டத்தில் வாகனமோட்டிகளைப் பார்த்ததும், ஒரு யானை முகத்தைத் திருப்பிக் கொண்டது, அது வெட்கப்படுவது போல் இருந்ததாக, வைரலான டிக் டோக் வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வீடியோ இதுவரை 250,000-க்கும் மேற்பட்ட தடவை பார்க்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கில் நகைச்சுவைக் கருத்துகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக போக்குவரத்து நிலைக்குத்தினால் சற்று சினமடையும் வாகனமோட்டிகளுக்கு, இந்தவொரு சம்பவம் மறக்க முடியாத – மனதுக்கு இதமான சம்பவமாக மாறியுள்ளது.