
கோலா திரெங்கானு, அக்டோபர்-27,
சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளால் தனது வாகனம் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, தனது சொந்த லாரியையே எரித்த அந்த லாரி உரிமையாளருக்கு இன்று நீதிமன்றம் 3,500 அபராதம் விதித்தது.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு அந்த ஆடவர் நீதிபதியின் முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று, ஜாலான் தெப்போ பகுதியில் உள்ள படாங் ஆயர் இடைநிலைப்பள்ளி முன்பாக, JPJ அதிகாரி தனது கடமையைச் செய்ய தடுத்தற்காக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 3,500 ரிங்கிட் அபராதத்தை செலுத்தத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



