Latestமலேசியா

பெர்லிஸில் குப்புறக் கவிழ்ந்த லாரி மோதி சைக்கிளோட்டி பலி

சங்லாங், மே-20 – பெர்லிஸ் சங்லாங்கில் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் மோதப்பட்டு 21 வயது சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று மாலை ஜாலான் குவாலா சங்லாங்கில் கிளினிக் அருகே அவ்விபத்து ஏற்பட்டதாக, கங்கார் போலீஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop கூறினார்.

38 வயது ஆடவர் கங்காரிலிருந்து சங்லாங் நோக்கி லாரியை ஓட்டிச் சென்ற வழியில், சாலையோரத்திலிருந்த சைக்கிளோட்டி சாலையைக் கடந்து வலப்பக்கம் போக முயன்றார்.

சைக்கிளோட்டியை திடீரென கண் முன்னே கண்டதால் அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், அவரை மோதுவதைத் தவிர்க்க வலப்பக்கமாக லாரியை வளைத்தார்.

துரதிஷ்டவசமாக லாரி சாலையோர பள்ளத்தில் குப்புறக் கவிழ்ந்ததோடு, பக்கத்திலிருந்த சைக்கிளோட்டி மோதி நசுக்கியது.

அதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு Ahmad Faris Hakimi Ahmad Sakri அங்கேயே பலியானார்.

அவரின் உடல் சவப்பரிசோதனைக்காக துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனைக்குக்கொண்டுச் செல்லப்பட்டது.

லாரி ஓட்டுநருக்கு இடது இடுப்பில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!