
செமஞே, மே-6, ஏப்ரல் கடைசியில் சிலாங்கூர், செமிஞ்சேவில் கொலைச் செய்யப்பட்ட மாது மற்றும் அவரின் தம்பி மகன், பிளாஸ்டிக் பையால் மூச்சடைக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர்.
செர்டாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில் அது உறுதியானதாக, சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் துணை ஆணையர் மொஹமட் சைனி அபு ஹசான் கூறினார்.
இதுவரை ஐவரது வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன; எனினும் யாரும் கைதுச் செய்யப்படவில்லை.
கொலை விசாரணைத் தொடருவதாக அவர் சொன்னார்.
கொல்லப்பட்டது, 53 வயது மாது மற்றும் அவரது தம்பி மகனான 25 வயது இளைஞன் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
10 நாட்களாக வெளியில் வராத தனது அக்காள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஆடவர் முன்னதாக போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்தே சோதனைக்குச் சென்ற போலீஸ், 2 சடலங்களை மீட்டது.
வீட்டில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
கதவும் உள்ளிருந்து தாழ்பாள் போடப்பட்டிருந்ததாக போலீஸ் கூறியிருந்தது