Latestஉலகம்

பாலஸ்தீன – இஸ்ரேல் போர் ; இதுவரை 33 ஊடகவியலாளர்கள் பலி

கோலாலம்பூர், நவம்பர் 2 – அக்டோபர் ஏழாம் தேதி, காஸா முனையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் போர் மூண்டதில் இருந்து இதுவரை பல ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர்.

1992-ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்த வட்டாரத்தில் நிகழ்ந்த வேறு எந்த ஒரு மோதல்களில் இல்லாத அளவுக்கு, இம்முறை மிக அதிகமான செய்தியாளர்கள் அல்லது பத்திரியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று நவம்பர் இரண்டாம் தேதி வரையில், காசா முனையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 33-ஆக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

எண்மர் காயமடைந்த வேளை ; இதர ஒன்பது பேரை காணவில்லை அல்லது பிணைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்மப்படுவதாக, CPJ – ஊடகவியலாளர் பாதுகாப்பு செயற்குழு, ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!