ஈப்போ, பிப் 21 -முறையான லைசென்ஸ் இன்றி Cryptocurrency முதலீடுகளுக்காக 5.6 மில்லியன் ரிங்கிட்டை வைப்பு தொகையாக பெற்ற 19 குற்றச்சாட்டுக்களை ஒரு நிறுவனத்தின் மூன்று இயக்குனர்கள் மறுத்தனர். 41 வயதுடைய M. விஜேந்திரன் , 36 வயதுடையடானியல் மனோகரன் அப்துல்லா , 32 வயதுடைய M. தேவெந்திரன் ஆகியமூன்றுசகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கூட்டாகவும் மற்றும் தனித்தனியாகவும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஐனுல் ஷ்ஷரின் மொஹமட் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் 2020ஆம் ஆண்டிற்குமிடையே பல்வேறு தனிப்பட்ட நபர்களிடமிருந்து வைப்புத் தெகையை பெற்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை மற்றும் 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம். அந்த மூவருக்கும் தலா 20,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு ஏப்ரல் 18ஆம் தேதி அவர்கள் மீதான குற்றச்சாட்டு மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிபதி ஐனுல்தெரிவித்தார்.