Latestமலேசியா

ஈராயிரம் ரிங்கிட் கையூட்டு வாங்கிய அமலாக்க அதிகாரி; ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

சபா, பிப் 2 –  சபாவில், போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கவும், சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கவும் ஈராயிரம் ரிங்கிட் கையூட்டு வாங்கியதாக சந்தேகிக்கப்படும் அமலாக்க அதிகாரி ஒருவர், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மணி ஒன்பது வாக்கில், சபா ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அந்த 40 வயது நபர், கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு, மற்றொருவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர் பெற்றதாக சந்தேகிக்கப்படுவதாக, சபா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட நபர் தற்சமயம் பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்கப்பட்ட வேளை ; பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி, சபாவிலுள்ள, சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!