சைபர் ஜெயா, ஜன 19 – இ.பி.எப் எனப்படும் ஊழியர் சேமநிதிக்கான புதிய தலைமை செயல் அதிகாரியின் பெயரை தாம் விரைவில் அறிவிக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த பதவிக்கு பொருத்தமான அதிகாரிகளின் பெயர்களை அரசாங்கள் இன்னமும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். இ.பி.எப்பிற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கு முன் பொதுவாகவே வழக்கமான சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின் இ.பி.எப்பிற்கான புதிய தலைமை செயல் அதிகாரியின் பெயர் அறிவிக்கப்படும் என சைபர் ஜெயாவில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் இத்தவலை வெளியிட்டார்.