![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-06-30-PM-1634.jpg)
பினாங்கு, ஜூன் -4, தனது முதலாளியின் கார் பதிவு எண்களை வைத்து Toto 4D Jackpot-டில் பணம் கட்டி வந்த பினாங்கைச் சேர்ந்த 60 வயது ஆடவருக்கு, 10.6 மில்லியன் ரிங்கிட் பரிசுப் பணமாக விழுந்திருக்கிறது.
வீடுகளின் உட்கட்டமைப்புஊழியரான அவர், இதனால் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.
முதலாளிகளின் கார்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியானவை; தனக்கும் தனது சகாக்களுக்கும் அக்கார்களின் மீது எப்போதும் ஒரு கண் எனக் கூறிய அந்நபர், என்றாவது ஒரு நாள் தாங்களும் அது போன்ற கார்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்ததாகச் சொன்னார்.
எனவே, 9114 மற்றும் 2230 என்ற கார் பதிவு எண்கள் மீது பல காலமாக 4 இலக்க லாட்டரியில் பணம் கட்டி வந்த நிலையில், இப்போது jackpot அதிர்ஷ்டம் விழுந்திருப்பதாக, பரிசுப் பணத்தை வாங்குவதற்காக அண்மையில் கோலாலம்பூர் வந்த அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.
ஜாக்போட் பரிசுப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு, அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்றார்.
குடும்பத்தோடு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என, ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகி விட்ட அவ்வாடவர் மேலும் கூறினார்.
System 4 லாட்டரி டிக்கெட்டை வாங்கிய அந்நபர், ஜாக்போட்டில் மொத்தமாக 1 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 969 ரிங்கிட்15 சென்னையும் System Play போனசாக கூடுதாக 672 ரிங்கிட்டையும் அள்ளியுள்ளார்.