![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-04-Feb-2024-09-53-AM-1712.jpg)
கோலாலம்பூர், பிப் 3 – இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கி Touch n Go eWallet கணக்கில் கிரெடிட் கார்ட் மூலம் பண மதிப்பை கூட்டினால் ஒரு விழுக்காடு கட்டணம் விதிக்கப்படும்.
டெபிட் கார்ட் மற்றும் DuitNow மூலம் கூட்டினால் கட்டணம் இல்லை என TNG Digital Sdn Bhd நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலர் கிரெடிட் கார்ட் மூலம் அதிகமான பணத்தை Touch n Go eWallet கணக்கில் சேர்ப்பதைத் தடுக்க இவ்வாறு செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படுவதாக அது கூறியதோடு DuitNow மூலம் பணத்தை சேர்க்க அது ஊக்குவித்துள்ளது .