கோலாலம்பூர், மார்ச் 24 – ‘World Spiritual Forum’ ஏற்பாட்டில், முதல் முறையாக மலேசியாவில் சொற்பொழிவு வழங்க ‘Siddhguru Sri Siddheshwar Brahmrishi Gurudev’ வருகை புரிந்தார்.
‘Siddhguru’ அவர்களின் சொற்பொழிவு நேற்று லட்சுமி நாராயணன் கோயிலில் சிறப்பாக நடந்தேறியது.
192 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு மன அமைதி, கடவுளுடனான இணக்கம், மனிதாபிமானம், ஒற்றுமை என சனாதனம் வழி கற்பித்து வரும் ‘Siddhguru’ இம்முறை மலேசியாவுக்கும் வருகை புரிந்து உரையாற்றியுள்ளார் என ‘World Spiritual Forum’ தலைவர் ‘Sampat Poddar’ தெரிவித்தார்.
வாழ்க்கையும் ஆன்மிகத்தையும் பற்றி ‘Siddhguru’ மிகவும் எளிமையாக விளக்கியுள்ளதாகவும், அவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், பங்கேற்றவர்களில் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த சொற்பொழிவில் கலந்து கொண்டனர். திருப்பதி, ஆந்திராவிலிருந்து வருகை புரிந்த ‘Siddhguru’ வந்திருந்த பார்வையாளர்களுக்கு ஆசிர்வாதம் செய்து வாழ்த்தியுள்ளார்.