Latestமலேசியா

அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்

இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12,

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்.

நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

கணவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து இருவர் பெட்ரோல் திருடுவதை, 28 வயது பெண்ணும் அவரின் கணவரும் கண்டு விட்டனர்.

கையும் களவுமாக சிக்கிய 38 வயது பாகிஸ்தான் ஆடவனும், 60 வயது உள்ளூர் மாதுவும், அங்கிருந்த உதவி போலீஸார் துணையுடன் பிடிக்கப்பட்டு பின்னர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

2 பாட்டில்களில் பெட்ரோலும், ஒரு ஜோடி கத்தரிக்கோலும் கைப்பற்றப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமராசன் கூறினார்.

விசாரணைக்காக இருவரும் இன்று முதல் தடுத்து வைக்கப்படுவர்.

அவ்விரு சந்தேக நபர்களும் பெட்ரோல் திருட்டின் போது வசமாக சிக்கிக் கொண்ட வீடியோ முன்னதாக வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!