செப்பாங் , டிச 1 – இன்று முதல் விசா தளர்வு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு துறை 14 முகப்பிட சேவைகளை அதிகரிக்கும். கே.எல் ஐ.ஏ 1 மற்றும் இரண்டில் 78 முகப்பிடங்கள் இருப்பதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். வெளிநாட்டு வருகையாளர்களை சுமுகமாக சமாளிப்பதற்கு கூடுதலான 14 முகப்பிடங்கள் உறுதிப்படுத்தும் என அவர் கூறினார். அதே வேளையில் திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டல் வசதி குறித்தும் வருகையாளர்கள் குடிநுழைவுத்துறையிடம் உறுதிப்படுத்த வேண்டும் என ருஸ்லின் ஜூசோ கேட்டுக்கொண்டார்.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
19 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
19 hours ago