Latestமலேசியா

ஜோகூர், பாகோவில் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது முத்துக்குமரன்; தேடும் குடும்ப உறுப்பினர்கள்!

ஜோகூர், செப்டம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி முதல் ஜோகூர், பாகோவைச் சேர்ந்த 16 வயது முத்துக்குமரன் முருகன் எனும் இளைஞனை காணவில்லை என அவரது குடும்ப உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இது குறித்து வணக்கம் மலேசியாவை தொடர்புக் கொண்ட அவர்கள்; படிப்பு தொடர்பாக அந்த இளைஞன் வீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான முத்துக்குமரன், படிப்பு நாட்டம் இல்லாத நிலையில் இருந்துள்ளார். இதனால் அவருக்கும் தாயாருக்குக் அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. அவரைத் திருத்துவதற்காக பள்ளியையும் மாற்றியுள்ளார் அவரது தந்தை.

இந்நிலையில், புதிய பள்ளிக்கு இன்னும் செல்லாத முத்துக்குமரன், கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் நீல வர்ண சட்டை, கருப்பு கால்சட்டையுடன், வீட்டின் முன் காலணியைத் துடைத்துக் கொண்டிருந்த முத்துகுமரனை அதன் பிறகு யாரும் பார்க்கவில்லை.

ஆங்காங்கே அனைவரும் அவனை தேடியும் அவன் கிடைக்கவில்லை.

இதனிடையே அண்டை வீட்டு CCTV-யில் முத்துக்குமரன் முருகன் பை ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர்களிடம் முன்னதாக வேலை தேடி பத்து கேவ்விற்கு செல்லவுள்ளதாக முத்துக்குமரன் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

எனினும், பத்து கேவ் சுற்று வட்டாரத்தில் முத்துக்குமரன் இல்லாத நிலையை அறிந்து பெற்றோர்கள் தற்போது பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ திரையில் காணும் எண்ணுடன் தொடர்புக் கொள்ளுங்கள்.
016-278 2490

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!