
பாலிக் புலாவ – மே 27 – கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பாலிக் புலாவில் தங்கள் மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைச் செய்த கணவன்-மனைவி மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாக்க வேண்டிய 12 வயது நிரம்பிய அச்சிறுமியை, தங்களது வீட்டில் அடித்து காயப்படுத்தி சித்திரவதைச் செய்துள்ளனர் அத்தம்பதியினர்.
குற்றம் சாட்டப்பட்ட 47 வயது ஆணும், அவரது 49 வயது மனைவியும், குற்றத்தை மறுத்துள்ள நிலையில், அவ்விருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய 10,000 ரிங்கிட் ஜாமீன் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் அல்லது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.